search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் துறை"

    • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
    • கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2.11.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற் கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 30-ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகா மில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறி யியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனை த்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களு க்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்ட த்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடை யுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 94990 55942 மின்னஞ்சல்முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • மதுரையில் 9-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கம் முழுவதும் 100 தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் வாயி லாக வரும் 9-ந்தேதி திருப் பாலை இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவல கத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் நேரிலோ அல்லது spljobfairmdu2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனி யார் துறை நிறுவனங்க ளில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுவோர் தங்க ளது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் நேரில் வரவும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற் றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் தொலைபேசி எண். 0452-2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    • முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    • httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி ,என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

    இம்முகாமில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையான அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்க ணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திற னாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் நிறுவனங்க ளில் பணியமர்த்த ப்பட்டாலோ அல்லது வேலைவா ய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் தங்களது சுயவிபரங்க ளை பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருக்கும் வேலையளி ப்போர்கள் விபரம் அறிய hts/www.decctenkasi.com.mega jobfain:202 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    • கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 12-ந் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இரு ந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த, 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொ றியியல் பட்டம் படித்தவர்கள், மருத்துவத்துறை சா ர்ந்த செவிலியர்கள், ஆய்வ க உதவியாளர்கள், லேப் டெக்னிசீயன்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கல ந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நா ட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலைநாடு நர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணி யமர்த்தம் செய்யப்படும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்ப டமாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல்நெறி வழிகாட்டும் மைய த்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, 9499055942 அல்லது மின்னஞ்சல் முகவ ரி. erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொ டர்பு கொள்ளலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 

    • சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.

    சிவகங்கை

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.

    இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக் கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    அதன்படி வரும் 21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி:erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர்.
    • இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது .

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. எனவே, வருகிற 21 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ , டிப்ளமோ , பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10-30 மணிக்கு நடக்கிறது.
    • எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 16-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10-30 மணிக்கு நடக்கிறது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ.,டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    வேலையளிப்போரும் மேலும் வேலை நாடுபவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரி கள், பட்டய ப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்ற வர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்கு பவர்கள், தையல் கற்றவ ர்கள் என அனைத்து வித தகுதியுள்ள மாற்றுத்திற னாளி, வேலை நாடுநர்களும் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவ சமானதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்க ளுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே தனியார் துறை யில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுஎண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 9499055942, 94990 55943, 04242275860 அல்லது மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வி தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர்(எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.1.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற

    28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய தென்காசி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டதன்படி அனைவரும் இதனை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.
    • 100-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அலுவலக வளாகத்திலேயே நடைபெறும் இந்த முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×